2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !
Tuesday, December 5th, 20232022 ஆம் ஆண்டில் தொழில் பிரச்சினைகள் வேலைநிறுத்தமாக அதிகரித்ததன் காரணமாக பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து (17,095) மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் துறையின் செயல்திறன் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆண்டில், 22 வேலைநிறுத்தங்கள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் 5,558 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களின் தொழிலாளர் அலுவலர்கள் 79,700 தொழிலாளர் ஆய்வுகளையும், பெண்களின் இரவுப் பணி தொடர்பான பணி நிலைமைகள் குறித்து 193 ஆய்வுகளையும், குழந்தைத் தொழிலாளர் குறித்து 193 ஆய்வுகளையும் கடந்த ஆண்டு தொழிலாளர் துறை நடத்தியது. தொழில்துறை பாதுகாப்பு பிரிவு 4,600 தொழிற்சாலை ஆய்வுகள் மற்றும் விபத்து விசாரணைகளை நடத்தியது மற்றும் தொழில்சார் பாதுகாப்பு பிரிவு 1,583 உயிரியல் ஆய்வுகள் மற்றும் தொழில்துறை ஆய்வுகளை நடத்தியதன் பின் இந்த தகவல் கிடைக்கப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|