2020 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவு இன்றுமுதல் ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவுகள் இன்று ஆரம்பமாகின்றன.
அத்துடன் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள பதிவகள் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் 41 ஆயிரத்து 510 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அவர்கள் இன்றுமுதல் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் பதிவு செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிரத நிலையங்களில் மஞ்சள் கோடு!
வெசாக்கை முன்னிட்டு 762 சிறைக் கைதிகள் விடுதலை!
அரசாங்க அறிவித்தல்களை கண்டுகொள்ளதாத தனியார் வங்கிகள் – வாடிக்கையாளர்கள் கவலை!
|
|