வயோதிபப் பெண்ணை பொறுப்பேற்க கோரிக்கை!

Friday, October 21st, 2016

 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வயோதிப பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் பொறுப்பேற்க வேண்டும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா கோரிக்கை விடுத்தார்.

கடந்த 11ஆம் திகதி பி.ப 4.45 மணியளவில் பஸ் தரிப்பிடத்தில் இருந்து பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்ட 85வயது மதிக்கத்தக்க தம்பிஜயா தனலட்சுமி என்ற வயோதிபப் பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், மகள் ஒருவர் உள்ளார் அவர் வத்தளையில் வசிக்கின்றார் என்று அந்தப் பெண் தெரிவித்தார். அவரது குடும்பத்தினர், மகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

ed3dc214acda69645451caad6bcd6b8a_XL

Related posts: