மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிரத நிலையங்களில் மஞ்சள் கோடு!
Friday, July 6th, 2018கடந்த ஐந்து மாத காலத்தினுள் புகையிரதம் மோதிய விபத்துக்கள் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புகையிரத விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது.
பிரதான புகையிரதங்கள் மற்றும் புகையிரத மேடைகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வேலைத்திட்டம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புகையிரத மேடைகளில் மஞ்சள் நிற கோடு பதியப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் போதைக்கு அடிமையான 17 வயது மாணவன் - மறுவாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!
பொலிஸ் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்!
வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தனியார் துறையின் தலையீடு காரணமாக பல மோசடிகள...
|
|