2 மாதங்களுக்குள் மரண தண்டனை – அதிர்ச்சியில் போதைப்பொருள் குற்றவாளிகள்!
Thursday, February 7th, 2019
எவ்வித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே போதைப்பொருள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ கொலை முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாரித்துள்ள அறிக்கையை 2 வாரங்களுக்குள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
தரம் ஒன்று மாணவர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: ரோயல் கல்லூரியில் 07 பேர் இடைநிறுத்தம்!
சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் ...
கடன் மறுசீரமைப்பு குறித்து சீனாவுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற இராஜதந்திர ஆலோசனை சந்திப்பில் இலங்கையின் ...
|
|
|


