16ஆம் திகதி முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு!
Thursday, September 12th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாக தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு குறித்த ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று(11) அறிவித்துள்ளது.
விவசாய அமைச்சின் கட்டடமொன்றைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக பிரதமருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சந்தைகளில் இனிமேல் உள்ளூராட்சிசபைகளே வரி அறவிட வேண்டும் - உற்பத்தியாளர்கள்!
உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருங்கள் - பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ...
ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் - ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை!
|
|
|


