உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருங்கள் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்து!
Monday, August 16th, 2021
நாட்டில் தற்போது சுகாதார பிரிவின் கொள்ளளவு அதன் திறனைத் தாண்டிவிட்டது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டை மீண்டும் முடக்குமாறு அரசாங்கத்தைக் கேட்க மாட்டேன் என்றும் நாட்டின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு சுய பயணக் கட்டுப்பாடுகளை தங்களுக்கு விதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருக்குமாறு கடுமையாக வலியுறுத்து வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களை இழந்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை!
அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
கொரோனா தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக்க நாட்டு மக்கள் பொது நோக்குடன் ஆதரவு வழங்க வேண்டும் – அ...
|
|
|


