15, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!
Tuesday, May 4th, 2021
ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்பட்ட 15,000 ஸ்புட்னிக் – 5 கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று (04) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த கொவிட் தடுப்பூசிகள் அதிகாலை 1.15 அளவில், கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள், 60 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக அரச ஔடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்காலத்தில் மேலும் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து கிடைக்கப்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கச்சதீவு திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை!
இந்தியாவுடன் விமான பயிற்சியில் ஈடுபடும் இலங்கை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன...
இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை ...
|
|
|
மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தே இணையவழி கல்வி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜனாதிப...
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் - சுகாதார அமைச்சர் க...
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த மேலதிக கொடுப்பனவாக 2,500 ரூப...


