மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தே இணையவழி கல்வி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Monday, June 7th, 2021

நாடு தற்போது சந்தித்திருக்கும் மிக நெருக்கடியான கோவிட் தொற்றுநோய் பரவல் காலகட்டத்தில் – தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்புச் செயற்பாடாக, நாட்டின் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மாணவர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையினால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, கற்றல் செயற்பாடுகள் பின்தங்கிவிடவும் அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது இணையவழி மற்றும் நிகழ்நிலை தொழில்நுட்ப கல்விச் செயற்பாடுகள் எமது அனைத்து மாணவர்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் – இந்த இணையவழி கல்வி செயற்பாடுகள், உரிய, பொருத்தமான, வழியில் முன்னெடுக்கப்பட வேண்டியது – மாணவர்களினது மட்டுமன்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உள மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

அதன் காரணமாகவே – சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய துறைசார் நிபுனர்களின் பங்களிப்புடன் – இணைய வழி மற்றும் நிகழ்நிலை கல்வி வழிமுறைக் கோவை ஒன்றினை எமது கல்வி அமைச்சு தயாரித்துள்ளது.

காலத்தேவையின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து – இந்த வழிகாட்டல் கோவை தயாரிப்பு பணியில் பங்களித்த அனைவருக்கும் எமது நாட்டின் கல்விச் சமூகத்தின் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தமது மன ஆரோக்கியத்தையும், எமது நாட்டை நாளை தாங்கி நிற்கப்போகின்ற எமது மாணவச் செல்வங்களின் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளதாகவும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: