15 ஆம் திகதியுடன் A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு!

Thursday, January 11th, 2018

எதிர்வரும் 15ம் திகதியுடன் 2017ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களின் கால அவகாசம்நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர் மூலமும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தினால் தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்டஅறிவித்தலுக்கு அமையவும் விண்ணப்பங்களை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும்  - ஜனாதிபதி எச்...
வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடனான காலநிலை இன்று மாலையிலிருந்து சற்று அதிகரிக்கும்!
ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன...