12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவிருத்தி வங்கி!

Wednesday, December 21st, 2022

12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு குறைவாக பயிர்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் பயிரிடும் விவசாய குடும்பமொன்றுக்கு 20,000 ரூபாவும் மானியமாக வழங்கப்படும்.

அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த பணம் வைப்பிலிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: