12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவிருத்தி வங்கி!
Wednesday, December 21st, 202212 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு குறைவாக பயிர்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் பயிரிடும் விவசாய குடும்பமொன்றுக்கு 20,000 ரூபாவும் மானியமாக வழங்கப்படும்.
அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த பணம் வைப்பிலிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இது பொது முடக்கம் அல்ல – ஆனாலும் ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் - சுற்றுலாத்துறை அமைச்ச...
நாட்டில் இதுவரை முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை - பொய்யான செய்திகளே பரவுகின்றன என வர்த்தக அமைச்ச...
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு!
|
|