10ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் – மஹிந்த தேசபிரிய!

Monday, September 2nd, 2019


ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறிப்பிட்ட அந்த திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நவம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts: