யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை – பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்!
Friday, January 3rd, 2020மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
கண்டி – கொழும்பு மத்திய அதிவேக வீதி 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுவதுடன் இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான றுவன்புர அதிவேக நெடுஞ்சாலையும், குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
கொளுத்தும் வெயில்: மண் பானைக்கு மவுசு அதிகரிப்பு!
எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம் - வெளிவிவகார அமைச்சர் தினே...
ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க வலியுற...
|
|