மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மேலதிக அரச அதிபராக பதவியேற்பு!

Thursday, December 12th, 2019


யாழப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராகவும் முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபராகவும் பொது நிர்வாக அமைச்சால் இடமாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராக இடமாற்றப்பட்ட மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட திட்டப் பணிப்பாளராகவும் கோப்பாய் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய மருதலிங்கம் பிரதீபன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக வரும் திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது

Related posts: