சஜித்தை உடனடியாக வெளியேறுங்கள் – பொன்சேகா!

Tuesday, August 27th, 2019


ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ செயற்பட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறுமாறு சஜித் தலைமையிலான குழுவினருக்கு பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாஸ தற்போது கட்சியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களில் ஈடுபடவில்லை. கட்சி தலைவர் மற்றும் கட்சியை சிதைக்கும் வகையில் அவர் செயற்பட்டு வருகிறார். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் சஜித்துடன் இணைந்துள்ளனர். ஆனாலும் பெரும்பாலான உறுப்பினர்கள் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவின் கீழே செயற்பட்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts: