டெங்குத் தொற்று அதிகரிப்பு – இவ்வாண்டு 33 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
Thursday, July 13th, 2023இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, 52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 944 இற்கும் அதிகளவானோர் டெங்கு நோயுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று 13 ஆம் திகதி முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின்சார தூண்களுக்கு அருகில் வீடு கட்டுவதற்கு தடை!
நுண்கடன்களை பெற்ற பெண்களின் கடன் தொகை ரத்து!
அரச சேவையாளர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புக்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவருமாறு இலங்கை வெளிநாட்ட...
|
|