எலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு!
Monday, September 23rd, 2019
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கபட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனவரி, மார்ச், மற்றும் ஜூன் மாதங்களிலும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதுடன் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பதிவாகியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும், காலியில் 321 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
விபத்துக்கள் மூலம் மூளைச்சாவடைந்தோரின் சிறுநீரகங்களை பயன்படுத்த முடிவு!
தேர்தல் வாக்காளர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீடு!
சுற்றுச்சூழல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!
|
|
|


