காற்றுடன் கூடிய காலநிலை இன்றும் தொடரும்!
Saturday, July 20th, 2019
நாட்டில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
கூட்டுறவாளர் தினம் அடுத்த மாதம்!
உலக முடிவு பகுதியின் மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்!
கொவிட் தொற்றால் மரணித்த 91%மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர் - தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவி...
|
|
|


