உயர்தரப் பெறுபேறு: தீவகத்தில் வேலணை மத்திய கல்லூரி கலைப்பிரிவில் முன்னிலை!

Saturday, December 28th, 2019


வெளியாகியுள்ள கல்விப்பொதத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் தீவகப் பகுதியில் வேலணை மத்திய கல்லூரி கலைப்பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது.

உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்றையதினம் வெளியானது. இதனடிப்படையில் குறித்த பாடசாலையில் இருந்து கலைப்பிரில் தோற்றிய  மாணவர்களான ஜேக்கப் பெர்ணாண்டோ றெஜின்  கலைப்பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதலாவது இடத்தையும் குணதாஸ் மதுமிதா கலைப்பிரிவில் 2A,B பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் இரண்டாவது இடத்தையும் இரத்தினசீலன் இதர்சினி  கலைப்பிரிவில் 2A,B பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தீவகப் பகுதியில் கற்பித்தல் செயற்பாடுகள் திருப்தியில்லை என பல மாணவர்கள் அங்கிருந்து யாழ் நகர் நோக்கி வந்து பிரபலமான பாடசாலைகளில் கற்றுவரும் நிலையில் இந்’த மாணவர்கள் தீவக பகுதியின் கற்றல் செயற்பாடுகளுக்கும் பெருமை சேர்துள்ளமை குறிப்பிடத்தக்கத

இதனிடையே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 திறமைச்சித்திகளை (3ஏ) தேசிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: