ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது!
Monday, April 19th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்றையதினம் (19) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தினம்’ தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக மேதின ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மேதின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்
Related posts:
எல்லை நிர்ணய குழுவின் சிபார்சு கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா!
ஜனாதிபதியின் தீர்மானம் பிற்போடப்பட்டது!
தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷம் எரிந்து இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு!
|
|
|


