வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022

டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் காரணமாக அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் என அவர் தெரிவித்தார்.

12 குழந்தைகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் பெற்றோர்களை அவதானமாக இருக்குமாறு

அவர் வலியுறுத்தியதுடன், காய்ச்சல், இருமல், சளி மற்றும் தொண்டை நோ காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: