வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!
Saturday, December 28th, 20192019ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.
அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தபால் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு!
பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு - இரத்த தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுமக்களிடம் ...
இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவ...
|
|