வெளிநாட்டு நாணயதாள்களுடன் மாலைதீவுப் பிரஜை கைது!

Sunday, September 4th, 2016
67 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மாலைதீவுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இவர் குவைத் நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவு நோக்கி பயணிக்கவிருந்தாக தெரியவந்துள்ளது.  சந்தேகநபர் 53 வயதான மாலைதீவுப் பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் 45,000 அமெரிக்க டொலர்களை சுங்க அனுமதியின்றி, பயணப் பையில் மறைத்து வைத்துக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

830805398Untitled-1

Related posts: