வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது!
Thursday, August 4th, 2016
இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு சட்டவிரோதமான முறையில் மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 1.10 மணிக்கு இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு செல்லவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் தங்களின் பயணப்பையில் வைத்திருந்த அலங்கார பூக்களினுள் வெளிநாட்டு நாணயங்ளை மறைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கடத்தலில் சம்பவத்தில் ஈடுப்பட்ட கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடைய இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கதிகாரிகள் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இரணைமடு குளத்தின் கீழ் 20 ஆயிரத்து 882 ஏக்கரில் பயிர்ச் செய்கை - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமத...
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்ட...
|
|