வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிப்பு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Saturday, December 25th, 2021வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு, மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, டொலர் ஒன்றுக்கு 10 ரூபா என்ற மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத காலப்பகுதியில், இதுவரையிலும் வெளிநாடுகளில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே, அமெரிக்க டொலர் ஒன்றிற்கு 10 ரூபா என்ற மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய பொறிமுறை!
வடமராட்சியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை –சந்தேகநபர் கைது!
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|