வெறிநாய்க்கடி நோய் – இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு எச்சரிக்கை!
Thursday, August 15th, 2024
வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
வெறிநாய்க்கடி நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவின்மை காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் அத்துல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.
நாய் கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சமூகமளித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரச தலைவர் கட்டளையிட்டும் கூட வடக்கு அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை: விவசாயிகள் கவலை!
கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் - உலக நாடுகளுக்கு சுகாதார ஸ்தாபனம் வலியுற...
புதிய அஞ்சல் நிலைய நிர்மாணத்துக்கு தனியாரின் ஒத்துழைப்பை பெற தீர்மானம் - அஞ்சல்துறை அமைச்சர் நடவடிக்...
|
|
|


