வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது – உற்பத்தியாளர் சங்கத்தின் தீர்மானம்!
Saturday, July 10th, 2021பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதற்கு, அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
செரண்டிப் நிறுவனத்தினால், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஒரு இறாத்தல் பாணின் விலையை எதிர்காலத்தில் 10 ரூபாவினால் அதிகரிப்பதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என செரண்டிப் நிறுவனம் எழுத்துமூலம் உறுதியளித்துள்ளது.
இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிநூட்ப உதவியுடன் முன்னோக்கிச் செல்லத் தயார் - ஜனாதிபதி தெரிவிப்பு!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று !
உணவு நஞ்சானது - ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதி!
|
|