வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு – இலங்கை மத்திய வங்கி!
Friday, October 18th, 2019கடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 27 கோடி அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாத்தில் 143,587 சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இத் தொகை 24.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
Related posts:
பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் பதவி நீக்கப்படவுள்ளனர்!
இலங்கையுடன் கைகோர்க்க சீனா தயார் - சீனா உயர் அரசியல் ஆலோசகர்!
மேலும் 3 பொலிஸ் பிரிவுகள் இன்று முடக்கப்பட்டன - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|