வீதி அனுமதிப்பத்திரம் இன்றி 100 தனியார் பஸ்கள் சேவையில் – இலங்கை போக்குவரத்து சபை!
Wednesday, December 20th, 2017
சுமார் 100 தனியார் பஸ்கள் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் பயணிக்கும் பஸ்களில் சுமார் 30 பஸ்கள் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடுவதாக சபையின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த வீதி மார்க்கத்தில் அமைந்துள்ள சில பொலிஸ் நிலையங்களின் உதவியுடன், சாரதிகள் வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணிப்பமதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி அனுமதிபத்திரமின்றி இயங்கும் பஸ்களை சுற்றிவளைப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
முக கவசங்களுக்கு தட்டுப்பாடு - அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர்!
நாட்டில் வருமானங்கள் குறைவடைந்திருந்தாலும் செலவினங்கள் முன்பைப் போல காணப்படுகிறது - அரசாங்க கணக்காய...
நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் - இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற...
|
|
|
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடர போவதில்லை - கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறை அ...
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் - நிதி இர...
நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அதிகரிப்பு - கடந்த மூன்று மாதங்களில் 695 அடையாளம் காண...


