விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குங்கள் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் பணிப்பு!
Friday, March 4th, 2022
எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அநுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் எரிபொருளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர்.
இந்தநிலையிலேயே, விவசாயிகளுக்கு எரிபொருளை உடனடியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
புதிய அரசியல் அமைப்பில் பாதகமான சரத்துக்கள் உள்ளடக்கப்படாது- ஜனாதிபதி!
டெங்கு நோய்த் தாக்கத்திற்கு 90 பேர் பலி - 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி - இராஜாங்க அமைச்சர்...
|
|
|
கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது - ஈ.பி.டி.பி...
செவ்வாய்முதல் மாகாணங்களுக்கு இடையே பேருந்து சேவை - இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்...
சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்று பேச்சு அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர...


