கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Tuesday, February 14th, 2017

கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற நல்லூர் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கனவை நனவாக்கும் பொறுப்பை கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் அதேவேளை அதற்காக அர்ப்பணிப்போடும் உண்மையோடும் உழைக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்தவகையில் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை ஒவ்வொரு மக்களிடமும் கொண்டுசென்று அதன் உண்மைத்தன்மைகளை தெளிவு படுத்தவேண்டியது மிக அவசியமானமதாகும்.

எனவே கட்சியின் செயலாளர் நாயகம் அவர்களின் எண்ணக்கருவில் உருவாகியுள்ள இந்த புதிய நிர்வாக செயற்பாடுகளுக்கு அனைவரும் தங்களது உணர்வுபூர்வமான உழைப்பை வழங்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என தெரிவித்தார்.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் உடனிருந்தனர்

07

08

Related posts: