விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளராக 3888 பேர் நியமனம்!

Saturday, May 11th, 2019

பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக சர்வதேச தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆகக்கூடிய வெற்றிகளை பெற்ற 3888 சிரேஷ்ட வீர, வீராங்கனைகளை பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலைகளில் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. காலை 11.30 முற்பகல் இடம்பெறும் இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

Related posts: