விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை!

Saturday, March 31st, 2018

பால்மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பால்மாவின் விலையை 100 ரூபாவாலும், எரிவாயுவின் விலையை 275 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. எனினும், அதற்கு இன்னும் அனுமதிவழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு காலம் வரையும் இந்தப் பொருட்களின் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: