வார இறுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாக்களிப்பு ஒத்திகை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, June 10th, 2020

பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஒத்திகையை 12 மாவட்டங்களில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வாக்களிப்பை நடத்தவதில் எதிர்நோக்கப்படும் சவால்களை அறிவதற்காக இந்த ஒத்திகை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது..

கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை, களுத்துறை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த ஒத்திகைகள் நடக்கும் என்று தேர்தல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சமூக இடைவெளயை பேணுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமிநாசினிகளை பயன்படுத்துதல், தேசிய அடையாள அட்டைகளை கையில் தொடாது பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து இந்த ஒத்திகைகளில் அதிகம் கவனம் செலுத்தப்படும். கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலாங்கொடையில் பொதுத் தேர்தலுக்கான முதல் ஒத்திகை நடத்தப்பட்டது

Related posts: