வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு அறிக்கை சமர்ப்பிப்பு!
Thursday, June 8th, 2017வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்ற சாட்டுக்கள் தொடர்பாக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை வடமாகாணசபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் விசாரணை குழு ஒன்றை நியமித்திருந்தார்.இந்த விசாரணை குழுவின் அறிக்கை கடந்த மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.இந்நிலையில் மேற்படி அறிக்கை ஊடகங்களுக்கு கசிந்தும் இருந்தது.
இந் நிலையில் நேற்றய தினம் நடைபெற்ற வடமாகாணசபையின் 94ம் அமர்வில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் நேற்றய அமர்வுக்கு வராமையினால் நேற்றய தினம் குறித்த அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.இந்நிலையில் இன்றைய தினம் விசேட அமர்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.இன்றைய அமர்வில் முதலமைச்சர் மேற்படி விசாரணை குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்பித்தார்
Related posts:
|
|