வாரமொன்றுக்கு 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர் – தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தகவல்!
Sunday, September 25th, 2022ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாவதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பெருமளவான தொடருந்து விபத்துக்கள் பயணிகளின் கவனயீனத்தால் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொடருந்து மிதிபலகையில் பயணிப்பதால் அதிகளவான விபத்துக்கள் நிகழ்கின்றன.
தொடருந்து பயன்பாடு மற்றும் குறுக்கு வீதிகள் ஊடாக பயணிக்கும் போது தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன பயணிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்கா...
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!
திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் - தமிழ் மொழி பேசுபவர்களே பாதிக...
|
|