யாழ்ப்பாணத்தில் பலத்த மழை!
Sunday, July 9th, 2017யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றையதினம் கடுங்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.இதன்காரணமாக சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குடாநாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.அத்துடன் கடுங்காற்றுக் காரணமாக மின்கம்பங்கள் பல பிரதேசங்களில் சேதமடைந்துள்ளதால் சில பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டதாகவும் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துப் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் யாழ்.மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சியான காலநிலையினை அடுத்து குடிநீரிற்குத் தட்டுப்பாடு நிலவியதுடன், கால்நடைகளும் பெரிதும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
65000 பொருத்து வீட்டுத்திட்டம்: முதற்கட்ட பயனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு.!
அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசே...
|
|