யாழ்ப்பாணத்தில் பலத்த மழை!
Sunday, July 9th, 2017
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றையதினம் கடுங்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.இதன்காரணமாக சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குடாநாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.அத்துடன் கடுங்காற்றுக் காரணமாக மின்கம்பங்கள் பல பிரதேசங்களில் சேதமடைந்துள்ளதால் சில பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டதாகவும் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துப் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் யாழ்.மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சியான காலநிலையினை அடுத்து குடிநீரிற்குத் தட்டுப்பாடு நிலவியதுடன், கால்நடைகளும் பெரிதும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மரம் வெட்டும் இயந்திரம் இறக்குமதிக்கு தடை!
கல்வி சீர்திருத்த செயற்பாடு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...
பசுமாடுகளை திருடுபவர்களுக்கு ஓராண்டு கடூழிய சிறை - அபராதத் தொகையாக 10 இலட்சம் ரூபா - விவசாய அமைச்சர்...
|
|
|




