தபால் மூல வாக்களிப்புக்கு இரு நாட்கள் மேலதிகமாக வழங்கல்!
Saturday, January 6th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு எதிர்வரும் 25, 26 ஆகிய தினங்களுக்கு மேலதிகமாக இன்னும் 02 நாட்களை ஒதுக்க தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் தபால் மூலம் வாக்களிப்போர் தமக்கு உரித்தான மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் பெப்ரவரி 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் வாக்குகளை அளிக்க முடியும் எனவும்தபால் மூல வாக்கு அட்டைகள் அனைத்தும் எதிர்வரும் 18ம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்வு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பதில் தேர்தல் பொறுப்பாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய நடைமுறையில் அரச பணியாளர்களுக்கு பதவி உயர்வு!
நள்ளிரவுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு - நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!
கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலக தீர்ம...
|
|