வாடகை அடிப்படையிலான கட்டடங்களை அமைச்சுகளின் பாவனைகளுக்கு பெற்றுக்கொள்ள – ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!
Thursday, August 27th, 2020அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பாவனைகளுக்கு வாடகை அடிப்படையிலான கட்டடங்கள் மற்றும் வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் செலவுகளை குறைக்கும் வகையில் செயற்படுமாறும் சகல அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் தற்போது தனியார் கட்டடங்களில் இயங்கியவரும் அரச நிறுவனங்களை முடிந்தளவு அரசாங்க கட்டடங்களுக்கு கொண்டு செல்லுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்பதாக அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதனை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
செலவுகளை குறைப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
என்றுமில்லாத வகையில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பு!
பொருளாதார இலாபத்தை அரசு இழக்கக்கூடாது - மத்திய வங்கி ஆளுநர் !
எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவ...
|
|