வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
Tuesday, May 14th, 2019இந்த ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கிராம சேவகர்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
போர்க் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில்!
இறக்குமதி அரிசிக்கான வரிச் சலுகைக்காலம் நீடிப்பு!
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி - சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடு செல்லலாம் – அமைச...
|
|