வவுனியா பேருந்து நிலையத்தில் பதற்றம்!
Thursday, June 8th, 2017வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தனியார் பேருந்துகளுக்கும், இ.போ.சபை பேருந்துகளுக்கும் பயணிகளை ஏற்றிய நிலையில் நேர முகாமைத்துவத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையிலான மோதலை பொலிஸார் தலையிட்டு தடுத்துள்ளனர். எனினும், மோதலில் இருவர் காயமடைந்த நிலையில், அவர்கள் இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் அது பயன்பாடின்றி மூடப்பட்டுள்ள நிலையில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையே தொடர்ச்சியாக கைகலப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|