அதிபர் – ஆசிரியர்கள் சுகயீன போராட்டம்!

Wednesday, March 13th, 2019

நாடளாவிய ரீதியில் இன்று (13) அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக குறித்த சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்திருந்தார்

Related posts: