வர்த்தமானி அறிவித்தலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் குழப்பம் – அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை!

Thursday, June 11th, 2020

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத் துறையைப் புதிய துறையாகப் பிரகடனப்படுத்தும் உயர்கல்வி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலால் குழப்ப நிலை தோன்றிறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 17வது புதிய துறையாக மொழி பெயர்ப்புக் கற்கைகள் துறையும், விஞ்ஞான பீடத்தில் 7வது கற்கைத் துறையான கடற்றொழில் துறையும், 8வது கற்கைத் துறையாக கணினி விஞ்ஞானத் துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சகல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், சகல வளாகங்களின் முதல்வர்களுக்கும், சகல நிலையங்களினதும் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ம் திகதி அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்தவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படியும், 2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 09ம் திகதி அப்போதைய உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் டபிள்யூ. ஏ. விஸ்வ வர்ணபாலவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படியும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இருந்த 6 துறைகளில் 3வதாக கணினி விஞ்ஞானத்துறை அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

தற்போது 7ஆவதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கடற்றொழில் துறையும், அதனையடுத்து 8வது கற்கைத் துறையாக கணினி விஞ்ஞான துறை புதிய துறையாக அறிவிக்கப்பட்டிருப்பது விஞ்ஞான பீடத்தில் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

இது பற்றி ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் ஊடாக உயர்கல்வி அமைச்சுக்குச் சுட்டிக்காட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 1991ஆம் ஆண்டுமுதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா...
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !
காணிகளை அபகரிக்காது, காணிகளில் விளைச்சலை அதிகரிக்கச் செய்து முன்னேற்றமடைய வேண்டும் - அமைச்சர் மஹிந்...