வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 25th, 2021

எதிர்வரும் பெரும்போகத்தின்போது சேதன பசளை பயன்படுத்தும் முறைமை தொடர்பில் அடுத்த மாதம், முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பயிர் செய்கைகளுக்கு தற்போது பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் பசளைகள் தேவையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தேவைக்கு ஏற்ப அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கும் - இலங்கைக்கான ...
இலங்கை இராணுவத்தின் தியாகபூர்வமான பங்களிப்பை புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது – வாழ்...
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரகளை பொதுமக்கள் சந்திக்க மீண்டும் வாய்ப்பு!