இன்று முதல் திருமலை –  யாழ் புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

Thursday, September 1st, 2016

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான, இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பேருந்து சேவையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திலிருந்து மாலை 4 மணிக்கு இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு தினமும் இந்த பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. பயணிகளின் வேண்டுகோளுக்கு அமைய, யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வவுனியா ஊடாக மற்றொரு சேவையும் நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கான இறுதி பேருந்து சேவை தினமும் மாலை 7 மணிக்கு மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: