வரி அனுமதிப்பத்திரத்தை பெற புகை சான்றிதழ் அவசியம் – போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்!
Sunday, September 13th, 2020இலங்கையில் வாகனங்களுக்கான வருடாந்த வரி அனுமதிப்பத்திரத்தை பெற வரும்போது புகை சான்றிதழ் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இருப்பது கட்டாயமென மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
வரி அனுமதிப்பத்திரத்தை பெற வரும்போது புகை சான்றிதழ் தேவையில்லையென வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை எனவும் அவ்வாறான எந்த ஒரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன புகைபரிசோதனையை நீக்குவது தொடர்பில் கொள்கை முடிவு ஒன்று எடுக்கப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். நீர்வேலியில் இடம்பெற்ற கார்- மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்!
யாழ்.மாநகரப் பகுதியில் ஆண்டின் முதல் 5 நாள்களில் டெங்கினால் 40 பேர் பாதிப்பு!
கிண்ணியா கோர விபத்து - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
|
|