கச்சதீவை ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது!
Monday, July 11th, 2016
கச்சதீவை இந்தியா மீண்டும் பெறவேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். அதைவிடுத்து வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார.
தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கவே கச்சதீவை மீட்போம் என்ற விடயத்தை ஜெயலலிதா முன்வைக்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் கூறுகையில்-
1976 ஆம் ஆண்டு இந்திய பிரதமரான இந்திராகாந்தியால் சட்டரீதியாக உடன்படிக்கை மூலம் அன்றைய இலங்கையின் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிடம் கச்சதீவு கையளிக்கப்பட்டது.
அன்றுடன் கச்சதீவு தொடர்பான இந்தியாவின் உரிமம் இல்லாமல் போய்விட்டது. கச்சதீவு இன்று இலங்கைக்கு சொந்தமானது. இரு நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய சட்டரீதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. இது சர்வதேச உடன்படிக்கை. இதனை மீறி கச்சதீவை மீண்டும் இந்தியாவால் பெற முடியாது. அவ்வாறு பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுத்து பலவந்தமாகவே கச்சதீவை இந்தியா பெறவேண்டும். அதைவிடுத்து வேறு வழியில்லை. இவ்வாறான செயற்பாட்டை இந்திய மத்திய அரசு முன்னெடுக்காது. எனவே ஜெயலலிதா கச்சதீவை மீட்போம் என கூச்சலிடுவது, தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினையை திசை திருப்பும் நோக்கானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
|
|