வடக்கு தற்போதும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது – மாகாண சுகாதார பணிப்பாளர்!

Wednesday, April 28th, 2021

நாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயகரமான முறையில் பரவிவரும் நிலையில் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு ஒட்சிசன் தேவை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது.

இந்நிலையில் வடமாகாணத்தில் தற்போது அவ்வாறான பாரிய ஆபத்தான நிலை இல்லாதபோதும் நாட்டில் பயண கட்டுப்பாடுகள் எவையும் நடைமுறையில் இல்லை. என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும் என மாகாண சுகாதார பணிப்பாளர், கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

சமகால கொரோனா நிலமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்று பரவும் ஆபத்து எப்போதும் உள்ளது. அவ்வாறு ஆபத்தை எதிர்நோக்கும் சந்தர்ப்பம் எழுந்தால் வடமாகாணம் அதற்கு தயாராக இருக்கின்றது.

குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை வைத்தியசாலை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை ஆகிய 4 வைத்தியசாலைகளில் ஒட்சிசன் மீள் நிரப்பு நிலையங்கள் உள்ளது.

தற்போது அவை தயார்ப்படுத்தப்பட்டிருப்பதுடன், வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகளுடன் கூடிய வென்டிலேட்டர் படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: