சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27 இல் ஆரம்பம் – அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவிப்பு!
Thursday, March 11th, 2021கடந்துமுடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இதன்போது நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
Related posts:
அமெரிக்காவின் கைக்கு மாறுமா நில அளவைத் திணைக்களம்!
ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து – உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்!
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை - அமைச்சர் ஜனக ...
|
|