வன்முறையற்ற சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் – அமைச்சர் அகிலவிராஜ்!

Saturday, October 21st, 2017

சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் பற்றி பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம்  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.

கல்வியமைச்சில் அண்மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சமூக மேம்பாட்டுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலேயே நாட்டின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது என்று பிரபல கிரிக்கெட் வீரர் சங்கக்கார தெரிவித்தார்.

ஆண், பெண் சமத்துவத்தை மேம்படுத்தி ஒழுக்காற்று விழுமியங்கள் ஊடாக சமூகத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன தெரிவிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சமூகத்திலிருந்து துடைத்தெறிய வாய்ப்பு கிடைத்தமை பற்றி மகிழ்ச்சி அடைவதாக கூறினார்இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி துன்லால் மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts: